Categories
பல்சுவை

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000…. எப்படி பெறுவது?…..!!!!

விவசாயிகளுக்காக மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் முதன்மையானது பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டமாகும். இந்த திட்டத்தின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ .6,000 வழங்கி வருகிறது. இந்த பணம் ஒரே நேரத்தில் அல்லாமல் மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்யப்படும். பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ், ரூ .2,000 இப்போது விவசாயிகளின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 9.59 கோடி விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேபோல, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறத் தகுதியுள்ள விவசாயிகள் இன்னும் 5 கோடிப் பேர் இணையாமல் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் இணைந்து பயன்பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உங்களுக்கு பணம் கிடைக்கவில்லை என்றால், 011-24300606 என்ற இலவச எண்ணுக்கு அழைத்து விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.மேலும் புதிதாக இத்திட்டத்தில் சேர விரும்புபவர்கள் pmkisan.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Categories

Tech |