Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஏன் என்ன விட்டு போனீங்க… வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

சித்தப்பா இறந்த துக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் திலீப் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திலீப்பின் சித்தப்பா உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் திலீப் எப்போதும் சோகமாக தனிமையில் இருந்துள்ளார். இதனையடுத்து மன உளைச்சலில் இருந்த திலீப் யாரிடமும் பேசாமல் தனது வீட்டில் திடீரென  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |