மீத்தேன், நியூட்ரினோ எட்டு வழி சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீதிக்கட்சியின் தொடர்ச்சி பேரறிஞர் அண்ணா, அண்ணாவின் தொடர்ச்சி கலைஞர், கலைஞரின் தொடர்ச்சி நான், என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த நாட்டு மக்களுக்கு மிகவும் நன்றி என்று கூறி சட்டப்பேரவையில் தனது உரையைத் தொடங்கிய முக ஸ்டாலின் பல நலத்திட்டங்களை அறிவித்தார். ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் நான் செய்ய உள்ளதை அனைத்தையும் கவர்னர் உரையில் கூறிவிட முடியாது.
இது வெறும் முன்னோட்டம் தான் என்று கூறிய அவர் ஸ்டெர்லைட் போராட்டத்தில் பொதுமக்களுக்காக குரல் கொடுத்த அனைத்து அரசியல் கட்சி தலைவர்கள் மீதான வழக்குகள் வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். நியூட்ரினோ, எட்டு வழிசாலை எதிர்ப்பு போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.