தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலளித்த ஸ்டாலின், கடந்த அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என அறிவித்துள்ளார். கருத்து சுதந்திரத்தை பறிக்கும் வகையில் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெறும். வேளாண்சட்டம், குடியுரிமை சட்டங்கள், கூடங்குளம் திட்டங்கள் எதிரான போராட்ட வழக்குகளும் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்பு சேலத்தில் பட்டாசுகள் வெடித்து விவசாயிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.