Categories
மாநில செய்திகள்

முருகேசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை – திருமா கோரிக்கை…!!!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஊரடங்கு மீறி பைக்கில் மது அருந்தி வந்த முருகேசன் என்பவரை காவல்துறையினர் தாக்கியதில் நேற்று உயிரிழந்தார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து முருகேசனை அடித்து கொலை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் காவலர் முருகன் ஆகியோரை கைது செய்து பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து உள்ளது. இந்நிலையில் முருகேசன் கொலைக்கு சம்பந்தமான காவலர் பெரியசாமியை சிறையில் அடைத்ததை திருமாவளவன் பாராட்டியுள்ளார். முருகேசன் கொலை சம்பந்தப்பட்ட பிற காவலர்களை உடனடியாக சிறைப்படுத்த வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் இழப்பீட்டை கூடுதலாக வழங்க வேண்டும் என்றும் கோரிய அவர் முருகேசன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்..

Categories

Tech |