நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜூலை 1ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு 24ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து இன்றுடன் ஊரடங்கும் முடிவடைய உள்ளதால் சில தளர்வுகள் உடன் மேலும் ஒரு வாரத்திற்கு, அதாவது ஜூலை 1ஆம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான மாவட்டங்களுக்கு மற்றும் போக்குவரத்து நடைமுறை தொடரும் என அறிவித்துள்ளது.