தமிழக 16வது சட்டப்பேரவையில் முதல் கூட்டத்தொடர் நேற்று முந்தைய நாள் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் மூன்றாவது நாளான இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான காரசார விவாதம் நடந்துக்கொண்டிருக்கிறது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடியின் பேச்சுக்கு பதிலளித்த நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கொரோனா பரிசோதனை முடிவுகளை உடனுக்குடன் வழங்குவதற்காக, பரிசோதனை மையங்களில் கூடுதல் மெஷின்களை வைத்து, முடிவுகள் 12 மணி நேரத்திற்குள் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார்.