Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு: மதுக்கடைகள் மூடப்படும்…. முதல்வர் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மதுக் கடைகள் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக சில மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்படாத நிலையில் அவர்கள் கேரள எல்லையில் உள்ள கடைகளுக்கு படையெடுக்கின்றனர். இதுகுறித்து கேரள முதல்வர் பினராய் விஜயன், தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருப்பதால், பலர் கேரள கடைகளுக்கு வருகின்றனர். அதனால் இரு மாநில மக்கள் நலன் கருதி தமிழக – கேரள எல்லையில் உள்ள மதுக் கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |