பிரான்சில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் முதல் சுற்றுக்கான வாக்கு வாக்குபதிவு எண்ணிக்கை முடிவடைந்த நிலையில், குடியரசு கட்சியின் வேட்பாளர் முன்னிலை வகித்துள்ளார்.
பிரான்சில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றதில், ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை முடிவடைந்துள்ளது. இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையின் கருத்துக்கணிப்பில் LREM என்னும் பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியின் கட்சி வெறும் 10 சதவீத வாக்குகளை கூட பெறவில்லை. அதேபோல் NR என்னும் கட்சியும் வெறும் 19 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது.
ஆனால் குடியரசு கட்சியினுடைய வேட்பாளரான சேவியர் பெர்ட்ராண்ட் முதல் சுற்று வாக்குப்பதிவு எண்ணிக்கையில் சுமார் 44 சதவீத வாக்குகளை பெற்று அனைத்து கட்சிகளையும் பின்தள்ளி முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து மீண்டும் 2 ஆவது சுற்றுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.