Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர்… வீடு திரும்பவில்லை… சோகத்தின் உச்சிக்கு சென்ற மனைவி…!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது நிலை தடுமாறி விபத்தடைந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராமநாதபுரத்தை அடுத்துள்ள அச்சுந்தன்வயல் பகுதியில் தணிகாசலம்(40) என்பவர் வசித்து வந்துள்ளார். அவர் சென்ட்ரிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல நேற்று தணிகாசலம் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்றுள்ளார். அப்போது அச்சுந்தன்வயல்-பேராவூர் இடையே உள்ள புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவரது இருசக்கர வாகனம் நிலை தடுமாறியுள்ளது.

இதில் தணிகாசலம் அங்கிருந்த மின்கம்பத்தில் மோதி படுகாயம் அடைந்துள்ளார். இதனையடுத்து அப்பகுதி வழியாக வந்த தணிகாசலத்தின் உறவினர் அருணாச்சல பாண்டியன் அவரை மீட்டு அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் தணிகாசலம் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் அவரது மனைவி குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |