பிறந்த நாளன்று 4 நண்பர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
மகாராஷ்டிர மாநிலம் அவுரங்காபாதை சேர்ந்த இளம் பெண் (19 வயது) ஒருவர் தன்னுடைய நண்பர்கள் அழைத்ததாக கூறி கடந்த கடந்த ஜூலை மாதம் 7-ஆம் தேதி மும்பை சென்றிருந்தார். அங்கு செம்பூரில் தனது நண்பர்களுடன் தங்கியிருந்த அவர் அன்று தனது பிறந்தநாளை கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடினார். பின்னர் அங்கிருந்த 4 நண்பர்களும் அப்பெண்ணை வற்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் அங்கிருந்து ஊர் திரும்பிய அப்பெண் இதுபற்றி வீட்டில் யாரிடமும் எதுவும் சொல்லாமல் அடிக்கடி தனிமையில் அழுதபடியே இருந்துள்ளார்.
இந்நிலையில் அவரது பிறப்புறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. பின்னர் அன்று நடந்த உண்மை சம்பவம் பற்றி விளக்கமாக பெற்றோரிடம் கூறினார். இதையடுத்து பெற்றோர் போலீசில் போலீசார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நண்பர்கள் 4 பேரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த இளம்பெண்ணின் உடல்நிலை சமீபத்தில் மிகவும் மோசமடைந்தது. இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேரும் இன்னும் கைது செய்யப்படாததை கண்டித்து இன்று காவல் நிலையத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தேசிய மாநாட்டு கட்சியின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.