பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹைபோவலின் என்ற குழந்தைக்கு மூன்றாவதாக இருந்த காலை மருத்துவர்கள் வெற்றிகரமாக நீக்கியுள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ஒரு குழந்தைக்கு இரண்டு கால்கள் தவிர்த்து கூடுதலாக பின்புறத்தில் மற்றொரு கால் இருந்தது. இது முக்காலி சிதைவு என்று கூறப்பட்டது. இதையடுத்து இந்த கால் நரம்பியல் ரீதியாக அப்படியே இருந்தால் காலில் சத்து குறைவாக இருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இக்குழந்தைக்கு 4 மருத்துவர்கள் கொண்ட குழு 6 மணிநேரம் அறுவை சிகிச்சை செய்தனர். பின்னர் கால் பிரித்தெடுக்கப்பட்டது.
குழந்தையின் குடும்பத்தாருக்கு வசதியில்லாத காரணத்தினால் அறுவை சிகிச்சை செய்வதற்கு பல தொண்டு நிறுவனங்கள் உதவி செய்ய முன்வந்தனர். பின்னர் அறுவை சிகிச்சைக்கு சுமார் 1.25 லட்சம் செலவாகியுள்ளது. நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர் கே கவுசல் ஆகியோர் கொண்ட குழு குழந்தைக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து முடித்துள்ளனர்.