Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த தளர்வுகள்…. முதல்வர் ஸ்டாலின் முடிவு…..!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் சில தளர்வுகள் அறிவிப்பது பொது மக்கள் கையில்தான் உள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற ஜூன் 21-ஆம் தேதி முதல் மாவட்டத்திற்குள் இயங்கும் நகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் சில தளர்வுகள் அளிப்பது மக்கள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றுவதை பொறுத்துதான் இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |