2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த வங்காள தேச கிரிக்கெட் வாரியம் விருப்பம் தெரிவித்துள்ளது.
கடந்த 1998 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 போட்டிகள் நடந்துள்ளது. இதில் இறுதியாக கடந்த 2014ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் வங்காளதேச கிரிக்கெட் வாரியம் 2025 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய தலைவரான நஜூமுல் ஹசன் கூறும்போது, ” இந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டி நடத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் எங்களால் செய்ய முடியும்” என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பாக கடந்த 1998ஆம் ஆண்டு அறிமுகமான ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வங்காளதேசம்தான் முதலில் நடத்தியது குறிப்பிடத்தக்கது