திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தியாகராஜ நகரில் பாலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி ஞான வின்சிகா(26). இந்நிலையில் குடும்பத்தகராறு காரணமாக கணவன்-மனைவிக்கு அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் மனமுடைந்த ஞான வின்சிகா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக பெருமாள்புரம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். இதனையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இளம் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.