தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடன் தொகைக்கான தவணை மற்றும் வட்டித் தொகையை திரும்ப செலுத்துவதற்கு ஒரு நுன்கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப்படுத்த கூடாது என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கடனை திரும்ப செலுத்த போதுமான அவகாசம் தரவேண்டும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கடன் வாங்கிய சுய உதவி குழு உறுப்பினர்கள் மாத தவணையை கட்டவில்லை என்றால் நாளொன்றுக்கு 1,000 ரூபாய்க்கு 20 ரூபாய் வட்டி கொடுக்க வேண்டும் என்று ஒரு பெண்மணி மிரட்டும் ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடன் வாங்கும் நிறுவனங்கள் சுய உதவிக்குழுக்களை கடன் வசூலிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என அரசு வலியுறுத்தியும் இவ்வாறு மிரட்டல் ஆடியோ வெளியாகியுள்ளது.