மின்கம்பி அறுந்து விழுந்ததால் மின்சாரம் தாக்கி பசு மாடு உயிரிழந்து விட்டது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்பாளையம் கிராமத்தில் அண்ணாதுரை என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு கண்ணகி என்னும் மனைவி இருக்கிறார். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக வயல் வைத்திருக்கின்றனர். அதில் அவர்கள் ஒரு பசுமாட்டை வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென சூறாவளி காற்று வீசியதால் மின்சார கம்பி அறுந்து பசு மாட்டின் மீது விழுந்துள்ளது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பசுமாடு உயிரிழந்துவிட்டது. இவ்வாறு ஆசையாக வளர்த்த பசுமாடு உயிரிழந்த சம்பவம் அந்த குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.