Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படி அபராதம் கட்டணுமா..?அனுமதி இல்லாமல் விற்பனை…எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள்…!!

ஊரடங்கு நேரத்திலும் அனுமதி அளிக்காமல் செயல்பட்ட கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு சில தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் விதிமுறைகளை மீறி அனுமதி அளிக்கப்படாத கடைகளில் விற்பனை நடைபெற்று கொண்டு இருக்கிறது. இதுகுறித்து தாசில்தார் காமாட்சி மற்றும் வருவாய்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி அதிகாரிகள் ஆற்காடு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு அரசு அனுமதி அளிக்காமல் செயல்பட்ட கடைகள் அனைத்திற்கும் அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். மேலும் இதுபோன்று விதிமுறைகளை மீறி கடைகளில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடை உரிமையாளர்களை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Categories

Tech |