Categories
உலக செய்திகள்

பயங்கரவாதிகளின் அதிபயங்கர தாக்குதல்…. தொடர்ந்து 5 கிராமங்களில் வெறியாட்டம்…. பிரபல நாட்டில் நடந்த கோர சம்பவம்….!!

கிராமத்திற்குள் புகுந்த பயங்கரவாதிகள் திடீரென்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 53 பேர் கொல்லப்பட்டத்துடன், 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியா நாட்டின் போகோ ஹராம் எனும் பயங்கரவாத கூட்டம் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நைஜீரிய நாட்டின் வடமேற்கு மாகாணத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் புகுந்துள்ளனர்.

இதனையடுத்து கிராமத்திற்குள் புகுந்த அந்த பயங்கரவாதிகள் கண்ணுக்கு தென்பட்டவர்களை எல்லாம் சுட்டுத் தள்ளியுள்ளனர். இதனை தொடர்ந்து பயங்கரவாதிகள் செல்லும் வழியில் இருக்கும் 5 கிராமங்களிலும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த பயங்கரவாத தாக்குதலில் மொத்தமாக 53 பேர் கொல்லப்பட்டதுடன், 100 க்கும் மேலானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலுக்கு இதுவரை எந்தவித பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Categories

Tech |