Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே! இன்றே கடைசி நாள்…. மறக்காம வாங்கிக்கோங்க…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 7 திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதில் இரண்டாம் தவணை கொரோனா நிவாரண தொகையாக ரூ.2000 வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இதையடுத்து இதற்கானடோக்கன் ஜூன் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி அறிவித்திருந்தார். இந்நிலையில் டோக்கன் வாங்க இன்றே கடை நாளாகும். நாளை முதல் ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |