சவுதி அரேபியா, ஹஜ் பயணம் மேற்கொள்ள கொரோனா தடுப்பூசி செலுத்திய 60,000 பேரை அனுமதிப்பதாக தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக சவுதி அரேபியா, ஹஜ் பயணத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பில் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்திய 60 ஆயிரம் நபர்கள் இந்த வருடம் ஹஜ் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஹஜ் அமைச்சகம் தெரிவித்துள்ளது, சவுதி குடிமக்களுக்கும், சவுதி அரேபியாவில் வாழும் மக்களுக்கும் இந்த வருடம் ஹஜ் பயணத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இதில் 60 ஆயிரம் நபர்கள் மட்டுமே பயணம் மேற்கொள்ள முடியும். இது குறித்து சவுதி அரேபியா அரசு கூறுகையில், ஜூலை மாதத்தின் கடைசியில் ஹஜ் பயணம் ஆரம்பிக்கவுள்ளது. கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், 65 வயதுக்குட்பட்டவர்கள், கடுமையான நோய் பாதிப்பு இல்லாதவர்கள் மட்டும் தான் ஹஜ் பயணதிற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருக்கிறது.