Categories
தேசிய செய்திகள்

எங்கள் மகன் பொய் கூறுகிறான்…”10 ஆண்டுகள் காதலியை மறைத்து வைத்திருந்த விவகாரம்”… தொடரும் மர்மம்…!!!

10 ஆண்டுகளாக காதலியை வீட்டிற்குள் மறைத்து வைத்திருந்த சம்பவம் தொடர்பாக ரகுமானின் பெற்றோர்கள் அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயலூர் கிராமத்தை சேர்ந்த ரகுமான் என்பவர் வீட்டின் அருகே இருந்த பெண் சஜிதா. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சஜிதா மாயமானார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பெயரில் ரகுமான் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். அப்போது தனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது என தெரிவித்துள்ளார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

10 ஆண்டுகளாக ஒரு அறையில் சஜிதாவுக்கு பாதுகாத்து உணவு வழங்கியுள்ளார். சிறிய அறையில் ஜன்னல் ஒன்று இருக்கும் அதன் கம்பிகள் அகற்றி விட்டு வெளியில் வருவது போல் இருக்கும்.சஜிதா கழிப்பறையை பயன்படுத்த இரவில் மட்டும் வெளியில் வருவார். கம்பிகளை அகற்றிவிட்டு ஜன்னலுக்கு வெளியே குதித்து வீட்டிற்கு வெளியே குளியலறைக்கு செல்வார். அவர் நோய்வாய்ப்பட்டால் ரகுமான் மருந்து வாங்கிக் கொண்டு வந்து தருவார். அவரது அறையில் ஒரு சிறிய டிவி இருக்கும் அதை பார்த்துக்கொண்டு அவர் இருப்பார். இது போன்று 10 ஆண்டுகள் அந்த பெண்ணை மறைத்து வைத்து வாழ்ந்து வந்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக ரகுமான் வேலைக்கு செல்லவில்லை. வீடு வாடகைக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. 2021 அவர் வீட்டை விட்டு வெளியேறி பாலக்காட்டில் உள்ள விதானசேரி என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடுஎடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் ரகுமானை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அவரை தேடி கண்டுபிடித்த போது தான் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து இருவரையும் சேர்ந்து வாழும்படி நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இந்த விசித்திரமான கதையைப் பற்றி பதிலளிக்கப்படாத பல கேள்விகள் இருந்தாலும், இவ்வளவு சிறிய வீட்டில் சஜிதா இருப்பதை குடும்பம் எப்படி அறிந்திருக்கவில்லை என்பதிலிருந்து தொடங்கி, ரஹ்மானும் சஜிதாவும் ஏன் வெளிப்படையாக வாழ இவ்வளவு நேரம் காத்திருந்தார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இதுகுறித்து அவரது பெற்றோர் கூறியதாவது:

ரஹ்மானின் பெற்றோர்கள் தங்கள் மகன் பொய் கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளனர்.  மேலும் நாங்கள் அந்தப் பெண் இருக்கும் சத்தம்  கேட்டதில்லை. அது எப்படி சாத்தியம் மூன்று ஆண்டுகளுக்கு முன்புகூட மேல் கூரை ஓடுகள் இடிந்து விழுந்ததால் ,அதை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தோம். அப்போது ஒருமுறை மட்டும் நாங்கள் ரகுமான் அறைக்கு சென்று வந்தோம். அங்கு அவர் இருப்பதை எப்படி கவனிக்காமல் இருந்திருப்போம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சஜிதா அறையிலிருந்து வெளியே வந்ததாக கூறப்படும் ஜன்னல் கம்பிகள் மூன்று மாதத்துக்கு முன்புதான் அகற்றப்பட்டது. ரகுமான் அரைச் சுவர் கொண்ட ஒரு அறையில் தான் தங்கியிருந்தார். அந்த அறையில் யாராவது தங்கி இருந்தால் அதை அறிந்திருப்போம். மேலும் இவர் கூறுவது அனைத்தும் பொய். அந்த அறையிலிருந்து இதுவரை எங்களுக்கு எந்தவித சத்தமும் கேட்டதில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |