Categories
உலக செய்திகள்

அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியை பயன்படுத்த…. தடை செய்த இத்தாலி அரசு….!!!!

உலகம் முழுவதிலும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் ஏற்படும் பாதிப்பு எண்ணிக்கையும் உயிரிழப்பு எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசுகள் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. அதன்பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது உலகமெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி வழங்கப்படமாட்டாது என்ற இத்தாலிய அரசு அறிவித்துள்ளது. சிறுவர்களுக்கு அதன் மூலம் பக்க விளைவுகள் ஏற்படுவதால் இது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய இந்த தடுப்பூசி, இந்திய வகை டெல்டா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்று இங்கிலாந்து அரசு கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |