தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதிலும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிதி உதவிகளை வழங்கி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் திரைப்பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் மக்களுக்கு உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா நோய் தொற்றால் வாழ்வாதாரம் இல்லாமல் கஷ்டப்படும் மதுரை வால் நாட்டுப்புற கலைஞர்கள் சுமார் 100 குடும்பங்களுக்கு 2000 ரூபாய் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை முன்னாள் அதிமுக. அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.