தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிகமாக பரவி வருகிறது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். மேலும் நோய் தொற்றால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வரும் சூழலில் இணை நோய்களாலும் ஒரு சிலர் மரணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா காலத்தில் இணைநோய்களால் மரணமடைந்துள்ளவர்க்ளின் இறப்பு சான்றிதழ்களை நிபுணர் குழுவை கொண்டு ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மரணம் குறித்து தெளிவான பதிவுகள் இருந்தால்தான் தொற்றுக்களை சமாளிக்க, நிவாரணம் வழங்க உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது. இவ்வாறு ஆய்வு செய்வது குறித்த அறிக்கையை ஜூன் 28-ல் தாக்கல் செய்ய அரசுக்கு ஆணையிட்டுள்ளது.