Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறப்பு…? – வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாகப் பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக  கடந்த 24ஆம் தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. இதையடுத்து ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு அடுத்தடுத்து நீடித்து வந்த ஊரடங்கின் பலனாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.

இந்நிலையில்  ஜூன் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கை நீட்டிப்பது, தளர்வுகள் வழங்குவது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை நடந்து வருகிறது. இதில் மாவட்டத்திற்குல் பேருந்து இயக்கம், மின்சார ரயில் சேவை தொடக்கம், தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக என தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |