Categories
மாநில செய்திகள்

பாமக சுட்டிக்காட்டிய தவறை…. தமிழக அரசு சரி செய்திருக்கிறது…. ராமதாஸ்….!!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெறுவதாக தமிழக அரசு அறிவித்தது. தற்போது அடுத்த கல்வி ஆண்டு தொடங்கி விட்டது. ஆனால் இன்னும் கொரோனா வின் தாக்கம் குறையவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்கள் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது சரியான நடவடிக்கை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமாகா சுட்டிக்காட்டிய தவறை தமிழக அரசு செய்துள்ளது. மாணவர் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அவசரப்படாமல் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 

Categories

Tech |