Categories
சென்னை மாவட்ட செய்திகள்

Breaking: சென்னையில் ஜூன் 14-ஆம் தேதி வரை நீட்டிப்பு….. அதிரடி உத்தரவு……!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் சில தளர்வுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் 144 தடை உத்தரவு ஜூன் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் கூட கூடாது. மக்கள் சரியாக கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |