Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மக்கள் இதை செய்ய தடை – அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நோய்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற தீவிர அறிகுறிகள் இருப்பதன் காரணமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரு சிலர் பாதிப்பு ஏற்பட்டாலும் மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுயமாக மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டு வருகின்றனர்.

இவ்வாறு கொரோனாவால் பாதித்த மக்கள் தானாக சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக பாரசிட்டமால் மற்றும் ஆன்டிபயோடிக் மருந்துகளை வாங்கிச் செல்பவர்கள் முகவரி, தொலைபேசி எண்களை மருந்து கடைகள் அரசுக்கு தரவேண்டும் என்றும், காய்ச்சலுக்கு மருந்து வாங்கிச் செல்பவர்கள் கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |