தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ் மொழியை ஒன்றிய அரசின் அலுவல் மொழியாக மாற்ற திமுக அரசு பாடுபடும் இன்றைய முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். செம்மொழிக்கு மேலும் சிறப்பு சேர்க்க எத்திசையும் தமிழ்மணக்க தமிழக அரசு தொடர்ந்து உழைக்கும். கல்வெட்டு காலம் முதல் கணினி காலம் வரை சிறப்புற்று விளங்கும் தமிழ் மொழிக்கு அணிகலனே செம்மொழி அந்தஸ்து என அவர் கூறியுள்ளார்.