Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ரொம்ப கவனமா இருக்கணும்… தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு… அதிகாரியின் தீவிர முயற்சி…!!

தாசில்தார் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின்கீழ் பெரிய ஏரியில் 100 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற கலவை தாசில்தாரான நடராஜன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது தாசில்தார் அங்கு  பணிபுரியும் கூலி தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். மேலும் தாசில்தார் தொழிலாளர்களுக்கு  கொரோனா தொற்று ஏற்படுவதற்கான அறிகுறிகள் மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறியுள்ளார்.

இதனை அடுத்து கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களோ, தொற்று உறுதி செய்யப்பட்டவர்களோ தன்னை தானே எவ்வாறு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், என்றும் தொழிலாளர்களுக்கு தாசில்தார் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்.

Categories

Tech |