திருவாரூரில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோன தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் 14-ஆம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் கூட்டத்தை தவிர்ப்பதற்காக ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கியுள்ளனர். அதன்படி 1 ஒரு நாளைக்கு 200 பேர் வீதம் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் ரேஷன் பொருட்களை வாங்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால் திருவாரூர் மாவட்டத்தில் 782 ரேஷன் கடைகள் மூலம் 3 லட்சத்து 79 ஆயிரத்து 996 குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் பொருட்கள் வழங்குவதற்கான பணி தொடங்கியது. இதனையடுத்து பொதுமக்களுக்கு ரேஷன் கடைகளில் டோக்கன் அடிப்படையில் சமூக இடைவெளியுடன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.மேலும் வருகின்ற 15ஆம் தேதி முதல் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் பணியும் தொடங்க இருக்கின்றது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.