இலங்கையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
இலங்கையின் மாவனல்லை, தேவகளம் பிரதேசங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. கொழும்பூர், வத்தரணுவெண்லா, சீதாவக்க கடுவலை போன்ற இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விமானப்படை களமிறங்கியுள்ளது.
களனி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருப்பதால் நூற்றுக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மாவனல்லை என்னுமிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 2 பேரின் உடல்களை இன்னமும் மீட்கப்படவில்லை.