Categories
உலக செய்திகள்

“எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான்!”.. இளவரச தம்பதியின் அருமையான பதில்..!!

பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபி அளித்த நேர்காணலில் எது நடந்தாலும் ஹரி-மேகன் எங்கள் குடும்பம் தான் என்று கூறியுள்ளனர். 

பிரிட்டன் இளவரசர் எட்வர்டு மற்றும் அவரின் மனைவி சோபியிடம் ஒரு பத்திரிக்கையிலிருந்து  நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. அப்போது ஹரி மேகன் அமெரிக்க தொலைக்காட்சிக்கு ஓபராவுடன் அளித்த நேர்காணல் தொடர்பில் அவர்களிடம் கேட்கப்பப்பட்டது. அதற்கு அவர்கள் ஓபராவா? யார் அவர்? பேட்டியா? என்ன பேட்டி? என்று கிண்டலடித்து சிரித்திருக்கிறார்கள்.

அதன் பின்பு எது நடந்தாலும் நாங்கள் அனைவரும் ஒரே குடும்பம் தான். என்றும் நாங்கள் அப்படித்தான் இருப்போம் என்று கூறியிருக்கிறார்கள். அதாவது ஹரி-மேகன் தம்பதி ஓப்ரா வின்ஃப்ரேயுடன் அளித்த நேர்காணல், அரச குடும்பம் மற்றும் பிரிட்டன் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

எனினும் இளவரசர் எட்வர்ட் மற்றும் அவரின் மனைவி சோபி இவ்வாறு கூறியது வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கு முடிவடைந்த பின்பு ஹரியுடன் அதிக நேரம் பேசியதாக சோபி தெரிவித்திருக்கிறார்.

Categories

Tech |