Categories
தேசிய செய்திகள்

தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும்… உயர் நீதிமன்றம் கருத்து…!!

ஊரடங்கு காரணமாக உணவின்றி தவிக்கும் வாயில்லா பிராணிகளுக்கு உதவ தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே அமல்படுத்தப்பட்ட ஊரடங்கை நீட்டித்து சில மாநிலங்கள் அறிவித்து வருகின்றன. இதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்ற சூழல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக வாயில்லா பிராணிகள் அனைத்தும் உணவின்றி தவித்து வருகின்றன. உணவில்லாமல் பல உயிரினங்கள் இறந்து கொண்டே இருக்கின்றன.

இதன் காரணமாக ஊரடங்கில் உணவின்றி தவிக்கும் வாயில்லா விலங்குகளுக்கு உணவு அளிக்க நிதி உதவியோ, பொருள் உதவியோ வழங்க தனியார் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் பிராணிகளுக்கு உணவு வழங்க ஆளுநர் வழங்கிய ரூபாய் 10 லட்சம் நிதி ஆரம்பகட்ட உணவு வழங்க உதவி புரிந்துள்ளது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |