Categories
தேசிய செய்திகள்

‘ஸ்புட்னிக் வி’ உற்பத்தி செய்ய SERUM-க்கு ஒப்புதல்…. டிசிஜிஐ அனுமதி….!!!!

இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.

தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிஷில்டு ஆகிய தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை உற்பத்தி செய்ய சீரம் நிறுவனம் அனுமதி கோரி இருந்த நிலையில், அதற்கு டிசிஜிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தியாவில் உள்ள இரு தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் பொழுது, ஸ்புட்னிக் வி 91.6%அதிக திறன் வாய்ந்தது என்றும் இந்த தடுப்பூசியை பரிசோதனை மற்றும் பகுப்பாய்வு செய்த பிறகு உற்பத்தி செய்யப்படும் என சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |