பாகிஸ்தானில் நடந்த வெவ்வேறான இரு சாலை விபத்தில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டில் தண்டோ மஸ்தி கான் என்ற பகுதி அமைந்துள்ளது. இங்கு பயணிகள் பேருந்து ஒன்று காரின் மீது மோதிய விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதேபோல் பஞ்சாப் மாகாணத்தினுடைய தலைநகரான லாகூரில் பெரோஸ்பூர் சாலை அமைந்துள்ளது.
இச்சாலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளும், 1 பெண்மணியும் ஒரே மோட்டார் சைக்கிளில் பயணம் செய்துள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த பயணிகள் பேருந்து ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டையிழந்து மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.