Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளி… தூக்குபோட்டு தற்கொலை… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவந்த நோயாளி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் அழகுநகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் மாற்றுத்திறனாளியான யுவராஜ்(42) என்பவர் துடைப்பம் வியாபாரம் செய்து குடும்பம் நடத்தி வருகிறார். இவருக்கு கோகிலா என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 1 ஆம் தேதி கொரோனாவால் மூச்சு திணறல் ஏற்பட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவருக்கு ஸ்கேன் எடுத்ததில் நுரையீரல் மிகவும் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து யுவராஜ் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கழிவறை செல்வதாக கூறி சென்றுள்ள நிலையில் வெகுநேரமாகியும் வரவில்லை.

இதில் சந்தமடைந்த அவரது மனைவி சென்று பார்த்தபோது அரைஞாண் கயிறு மூலம் ஜன்னலில் தூக்கும்போது தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மருத்துவர்களை அழைத்துள்ளார். மேலும் தகவலறிந்து அங்கு வந்த போலீசார் யுவராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொரோனாவால் மூச்சு திணறல் ஏற்பட்டதனால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது.

 

Categories

Tech |