உத்தரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தி வருகின்றன. கிராம பகுதிகளில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பல உத்தரவையும் அரசு அறிவித்து வருகிறது.
இதேபோன்று உத்திரபிரதேச மாநிலம் பிரோசாபாத் என்ற பகுதியில் தடுப்பூசி போடாவிட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என அறிவித்துள்ளது. இந்த உத்தரவை மாவட்ட மேம்பாட்டு அலுவலர் சாஹித் கபூர் என்பவர் அறிவித்திருந்தார். மேலும் ஒரு பட்டியலை உருவாக்கி தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். இதனால் அங்கு உள்ள அரசு ஊழியர்கள் தங்களது சம்பளம் பாதிக்கப்படுமோ என்ற அச்சத்தில் தற்போது தடுப்பு ஊசி செலுத்துவதற்கு முன் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.