Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டில் எவருமில்லை…. டிரைவர் செய்த செயல்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

ராணிப்பேட்டையில் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் டிரைவரான பிரபுதேவா என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் பிரபுதேவா குடிப்பழக்கத்திற்கு அடிமையாகியிருந்ததால் இவருடைய மனைவியான டில்லி ராணி என்பவருக்கும், அவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன அழுத்தத்திலிருந்த பிரபுதேவா தன்னுடைய மாமியாரது வீட்டிற்கு சென்று அங்கு யாருமில்லாத சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பிரபுதேவாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |