இந்திய கிரிக்கெட் வீரர் புவனேஷ்வர் குமாருக்கும் ,அவருடைய மனைவிக்கும் கொரோனா அறிகுறி இருப்பதால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
கடந்த 2012 ம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருபவர் புவனேஷ்வர் குமார் . தற்போது இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் புவனேஸ்வர் குமார் இடம்பெறவில்லை. அவருக்கு காயம் ஏற்பட்டதன் , காரணமாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஆனால் அவர் டி 20 அணியில் இடம்பெறுவர் என்று கூறப்படுகிறது . உத்திர பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் தன் குடும்பத்துடன் புவனேஸ்வர் குமார் வசித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா அறிகுறி இருப்பதால் புவனேஷ்வர் குமார் ,அவரது மனைவி இருவரும் தங்கள் வீட்டில், மருத்துவரின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி கொண்டனர்.