Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

காற்றுடன் கூடிய கனமழையால்… 6 மின் கம்பங்கள் சரிந்து விழுந்தது… பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது…!!

அரியலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் காற்றுடன் பெய்த கனமழையால் 6 மின் கம்பங்கள் சரிந்து வயலில் விழுந்துள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் மற்றும் அதனை சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இந்நிலையில் ஸ்ரீபுரந்தான் மற்றும் அருள்மொழி கிராமத்திற்கு இடையே சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு நடவு பணி நடந்து வருகிறது. இதனையடுத்து நேற்று முன்தினம் பெய்த கன மழையால் வயல்களில் அமைக்கப்பட்டிருந்த 6 மின்கம்பங்கள் சரிந்து விழுந்துள்ளது.

இதனை பார்த்த அங்கிருந்த விவசாயிகள் உடனடியாக தா.பழூர் துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனைதொடர்ந்து அப்பகுதி முழுவதிலும் உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் நேற்று ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று  மின் கம்பங்களுக்கு சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Categories

Tech |