Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஏன் இப்படி ஆச்சுன்னு தெரியல… சப்-இன்ஸ்பெக்டருக்கு நடந்த விபரீதம்… தூத்துக்குடியில் பரபரப்பு…!!

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் ஏற்பட்ட விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் முத்தையாபுரம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுப்பிரமணியன் வேலையை முடித்துவிட்டு கடந்த 22ஆம் தேதி மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து இவர் தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் சென்று கொண்டிருந்த போது திடீரென மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால் கீழே விழுந்த சுப்பிரமணியனுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அதன் பின் அருகில் உள்ளவர்கள் உடனடியாக அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சுப்பிரமணியன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |