Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

நீங்க எப்படி திறக்கலாம்… ரகசிய தகவலில் சிக்கிய வியாபாரிகள்… சீல் வைத்த அதிகாரி..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளை திறந்து வியாபாரம் செய்த 2 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் தொற்று பரவுவதை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அறந்தாங்கி பகுதியில் ஊரடங்கை மீறி மளிகை கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யப்படுவதாக தாசில்தார் மார்ட்டின் லூதர் கிங்கிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்த போது அப்பகுதியைச் சேர்ந்த கண்ணன் மற்றும் சுரேஷ் ஆகிய இருவரும் மளிகை கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த 2 மளிகை கடைகடைகளையும் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |