தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (இன்று வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுள்ளது. இதில் எந்த தளர்வுகளும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் இன்று முதல் காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்களை தெருத்தெருவாக விற்பனை செய்ய காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக சென்னை மாநகராட்சியில் 7,500க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் வாங்கிய கடைகாரர்களின் செல்போன் எண்கள் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.