Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை கட்டாயம் கடைபிடிக்கணும்..! கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக… சிவகங்கையில் சிறப்பு நிகழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சியில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசம் அணிய அறிவுறுத்துதல், கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் ஆகியவை அறிவுறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் விதமாக கபசுர குடிநீர் வழங்கி, கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.

அந்த நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரதீப், சாக்கோட்டை மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பொன்னுச்சாமி, ஊராட்சி செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Categories

Tech |