Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இது தப்புன்னு தெரியாதா… வீட்டில் செய்த வேலை… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

 சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொட்டவெளி பகுதியில் குருநாதன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவர் தனது வீட்டில் சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் குருநாதனின் வீட்டில் சாராயம் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குருநாதன் வீட்டில்  சோதனை செய்துள்ளனர்.

அப்போது விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 1 1/2 லிட்டர் சாராயத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததோடு சட்ட விரோதமாக சாராயம் விற்பனை செய்த குற்றத்திற்காக குருநாதனை கைது செய்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |