Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மக்களின் நலன் கருதி… புதிதாக 145 படுக்கை வசதிகள்… தொடங்கி வைத்த அமைச்சர்…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக புதிதாக 145 படுக்கை வசதிகளை அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள செய்யூர், பவுஞ்சூர், மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி செய்து தர  திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பயன்படும் வகையில் 145 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளை ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ அன்பரசன் தொடங்கி வைத்துள்ளார். அதில் மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ், செங்கல்பட்டு திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பரணி உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Categories

Tech |