Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்குள்… அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும்… பிரகாஷ் ஜவடேகர் உறுதி…!!!

இந்தியாவில் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் பல மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அந்த மாநில முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் தடுப்பூசி பற்றாக்குறை குறித்த விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இந்நிலையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பற்றி செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டியில் டிசம்பர் மாதத்திற்குள் 26 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாராக இருக்கும். 108 கோடி மக்கள் தங்கள் தடுப்பூசியை பெற்றுக் கொள்வார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனால் 108 கோடி மக்கள் பயன்பெறுவர் என்று அவர் அந்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

Categories

Tech |