Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வீட்டில் இதான் இருக்கா….? கையும் களவுமாக சிக்கிய வாலிபர்… மடக்கி பிடித்த காவல்துறையினர்…!!

2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் காவல்துறையினருக்கு அப்பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 2 லட்ச ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்பின் கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக ஹரிஹரன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |